‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் | 8 ஆண்டுகளுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் கயல் சந்திரன் | இணைந்து நடிக்கும் தாயும், மகளும் |
தென்னிந்தியத் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகிலும் பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடியவர் மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம்.
கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதற்குப் பிந்தைய பாதிப்புகளால் உடல்நலம் குறைந்து செப்டம்பர் 25ம் தேதியன்று மரணம் அடைந்தார். அவரது மறைவால் கோடிக்கணக்கான ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். அவரது மறைவு பலரையும் துயரத்தில் ஆழ்த்தியது. அன்று அவருடைய பாடல்களைப் பற்றி பலரும் பல விதங்களில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவர் மீதான தங்களது அபிமானத்தை வெளிப்படுத்தினார்கள்.
அவர் மரணமடைந்த பிறகு வரும் முதல் பிறந்த நாள் இன்று. அவர் மறைந்தாலும் அவரது குரலால் வசீகரிக்கப்பட்ட அத்தனை ரசிகர்களும் இன்று அவரைப் பற்றிய தங்கள் நினைவுகளை மேலும் பகிர்ந்து அவரைப் பற்றிய நினைவுகளை சமூக வலைத்தளங்களில் மீண்டும் பதிவிட்டு வருகிறார்கள். பல சினிமா பிரபலங்களும் அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.
மறைந்த பின்னும் ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைக் கலைஞர்கள் ஒரு சிலரே. அதில் எஸ்பிபியும் ஒருவர் என்பது அவரது குடும்பத்தினருக்கு நெகிழ்ச்சியைத் தரும் என்பது உண்மை.