ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் என குறிப்பிடத்தக்க படங்களில் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி, முன்னணி நடிகையாக வளர்ந்து வந்தவர் நடிகை அஞ்சலி. கிட்டத்தட்ட 15 வருடங்களாக சினிமாவில் தாக்குப்பிடித்து, தற்போதும் கைவசம் சில படங்களை கைவசம் வைத்துள்ளார் அஞ்சலி. குறிப்பாக சமீபத்தில் வெளியான பவன்கல்யாண் நடித்த வக்கீல் சாப் படம், அஞ்சலி மீது மீண்டும் வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறது.
இந்தநிலையில் புதிய நடிகைகளின் வரவால் தனது வாய்ப்பு குறைந்துள்ளதா என்பது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் அஞ்சலி கூறியுள்ளதாவது : “புதிய நடிகைகள், சீனியர் நடிகைகளின் வாய்ப்புகளை பறித்துக் கொள்கிறார்கள் என்று ஒருபோதும் நான் அவர்களை குற்றம் சொல்ல மாட்டேன்.. காரணம் இயக்குனர் உருவாக்கும் கதைகள் மற்றும் கதாபாத்திரங்களுக்கு நமக்கான வாய்ப்பு இருந்தால் அந்த கதாபாத்திரம் நிச்சயம் எங்களை தேடித்தான் வரும். என்னை பொறுத்தவரை அந்த கதாபாத்திரத்திற்கு என்ன நியாயம் செய்யமுடியுமோ அதை மட்டும் சரியாக செய்தால் போதும்.. அதனால் வாய்ப்புகள் வரவில்லை என்பதற்காக யாரையும் குறை சொல்ல மாட்டேன்” என கூறியுள்ளார்