ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாகுபலி என்கிற வரலாற்று படத்தை தொடர்ந்து சாஹோ என்கிற கமர்சியல் ஆக்சன் படத்தில் நடித்தார் பிரபாஸ். தற்போது காதல் பின்னணியில் உருவாகி வரும் ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்தப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன
தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக பெரும்பாலும் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் படத்தின் ரிலீஸ் எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் இந்த படத்தை வாங்க முன்னணி ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு விலை பேசி வருகின்றன. அப்படி ஒரு ஓடிடி நிறுவனம் 500 கோடி ரூபாய் கொடுத்து இந்த படத்தை கைப்பற்ற முயற்சித்தது. ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளரோ அதை நிராகரித்து விட்டார்
இந்த படத்தை நேரடியாக தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது தான் தனது முடிவு என்றும் அதுவரை நாங்கள் பொறுமையாக காத்திருக்க தயார் என்றும் கூறிவிட்டாராம் படத்தின் தயாரிப்பாளர். இந்த படத்தின் பட்ஜெட் ஏற்கனவே திட்டமிட்டதை விட சற்று அதிகமாகி விட்டது என்றாலும்கூட,. ஓடிடி டீலிங்கை மறு யோசனைக்கு இடமின்றி நிராகரித்து உள்ளார்கள் என்பது ஆச்சரியமான விஷயம்தான்.