ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், துருவ நட்சத்திரம், திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக், மோகன் தாஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் மிகவும் நம்பிக்கை வைத்திருந்த ஒருவர் தனக்கு எதிராக செயல்பட்டது குறித்து பேட்டி ஒன்றில் கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது : 'ரசிகர்களிடம் பணத்தை பெற்று கொண்டு என்னைப்பற்றிய பர்சனல் விவரங்களை கூறுவது போன்ற செயல்களை என்னுடன் இருந்து கொண்டே, எனக்கு மிகவும் நம்பிக்கையான நபரே இதுமாதிரி செய்தது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மீது புகார் அளிக்க பலர் கூறினார்கள். என்றாலும் தப்பு நடந்து விட்டது. இனிமேல் நாம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும் என்று நான் அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டேன். என்னை போல மற்றவர்களுக்கு எதுவும் இதுபோன்று நேரக்கூடாது என்பதற்காக இதனை நான் சொல்கிறேன். எனவே யாரை நம்புவது? யாரை நம்பக் கூடாது? என்றே எனக்கு புரியவில்லை' என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.