தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பாலா இயக்கிய அவன் இவன் படத்திற்கு பிறகு விஷால் - ஆர்யா இணைந்து நடித்துள்ள படம் எனிமி. ஆனந்த் சங்கர் இயக்கிய இப்படம் ஆக்சன், திரில்லர் கதையில் உருவாகிறது. இந்தபடத்தின் ஒரு பாடல் காட்சியும், சில பேட்ஜ் ஒர்க்கும் பேலன்ஸ் இருப்பதாக கூறுகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது தனது 31ஆவது படத்தின் படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளார் விஷால். இந்த மாதம் முழுக்க படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்தநேரத்தில் வருகிற 9-ந் தேதி முதல் எனிமி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பும் 8 நாட்களுக்கு அதே ஐதராபாத்தில் நடக்கிறது. இந்த படப்பிடிப்பில் விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், மிருணாளினி ஆகியோரும் கலந்து கொள்கிறார்களாம். அதற்காக இப்போதே ஐதராபாத்தில் முகாமிட்டிருக்கிறாராம் எனிமி டைரக்டர் ஆனந்த் சங்கர்.