இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழா, ஆண்டுதோறும் கோவாவில் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20ம் தேதி தொடங்கி 28ம் தேதி முடிவடையும். ஆனால் உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக 2020ஆண்டு நவம்பர் மாதம் நடக்க வேண்டிய விழா இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் நடந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான 52வது சர்வதேச திரைப்பட விழா வருகிற நவம்பர் மாதம் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் போட்டி பிரிவில் கலந்து கொள்ள விரும்பும் படங்கள் வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.
52வது சர்வதேச திரைப்பட விழாவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். இந்த விழாவில் பிரபல இயக்குனர் சத்யஜித் ரேக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்து சுமார் 180 நாடுகளில் இருந்து 250 படங்கள் வரை இந்த விழாவில் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.