நாகார்ஜுனா - ராம் கோபால் வர்மாவின் 'சிவா' ரீ-ரிலீஸ் | சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் |
சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் அரவிந்த். இவர் தனது சகோதரி மகன் சசிவர்ஷனை (வயது 10) மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அண்ணா சாலையில் சென்றபோது பின்னால் இருந்த சிறுவன் தவறி கீழே விழுந்து காயம் அடைந்தான்.
உடனடியாக அவனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வலியால் துடித்த சிறுவன், சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் உளவியல் ரீதியான சிகிச்சை ஒன்றை மேற்கொண்டனர்.
சிறுவனுக்கு பிடித்த விஷயம் எதுவென்று விசாரித்தனர். அவன் விஜய்யின் தீவிர ரசிகன் என்றும், அவனுக்கு பிடித்தது பிகில் படம் என்றும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து டாக்டர்கள் செல்வோனில் பிகில் படத்தை சிறுவனுக்கு காட்டினர். அவன் அந்த படத்தை சிறுவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனுக்கு தேவையான சிகிச்சையை செய்து முடித்தனர்.