வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் ஆகிய படங்களில் நடித்து வரும் பிரபாஸ், அடுத்து நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் லாக்டவுன் காரணமாக பிரபாஸ் ஏற்கனவே நடித்து வந்த படங்கள் தாமதமாகி வந்ததால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்து வந்தது.
இந்தநிலையில் இன்று முதல் அப்படத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் தொடங்கியிருக்கிறார் நாக் அஸ்வின். இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச் சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது ஆந்திராவில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததை அடுத்து படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டிருப்பதால் நாக் அஸ்வினும் பிரபாஸ் படத்தின் படப்பிடிப்பை இன்று முதல் ஐதராபாத்தில் தொடங்கியிருக்கிறார். முதல் கட்டமாக பிரபாஸ் கலந்து கொள்ளாத நிலையில் அமிதாப்பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் நாக் அஸ்வின். இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பிரபாஸ் - அமிதாப்பச்சன் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம்.