ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

பத்திரிகையாளர்கள் இயக்குனராவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் அடுத்து வருகிறார் அரவிந்த் ஸ்ரீனிவாசன். அருள்நிதி நடிக்கும் தேஜாவு படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். இந்த படத்தில் மதுபாலா, ஸ்மிருதி வெங்கட், காளி வெங்கட், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி அரவிந்த் ஸ்ரீனிவாசன் கூறியதாவது: இது ஒரு த்ரில்லர் கதை. பல்வேறு த்ரில்லர் கதைகளில் அருள்நிதி நடித்திருந்தாலும் இது அவருக்கு முற்றிலும் வித்தியாசமான படமாக இருக்கும். இதில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தாலும் படத்தில் சீருடை எதுவும் அணிந்திருக்க மாட்டார்.
நாம் ஒரு புதிய இடத்துக்கு சென்றாலோ, அல்லது புதிய மனிதரை சந்தித்தாலோ, புதிய நிகழ்வு ஒன்றை சந்தித்தாலோ, அது நாம் ஏற்கெனவே பார்த்தமாதிரி, நமக்கு நடந்த மாதிரி இருக்கும். இதைத்தான் உலகம் முழுக்க தேஜாவு என்பார்கள். அதைத்தான் படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறோம்.
அடுத்த காட்சி என்ன என்பதை பார்வையாளர்கள் யூகிக்க முடியாத அளவுக்கு படம் இருக்கும். இந்தக் கதைக்களத்துக்குப் பாடல்கள் தேவைப்படாததால் வைக்கவில்லை. ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்கு பலமாக இருக்கும்.
மதுபாலா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். தமிழ்நாட்டில் பெரும்பாலும் காவல்துறை உயர் அதிகாரிகள் வடநாட்டவர்களாக இருப்பதால் மதுபாலாவை இதில் காவல்துறை அதிகாரியாக நடிக்க வைத்திருக்கிறோம். ஸ்மிருதி வெங்கட் கதாபாத்திரத்தைச் சுற்றித்தான் கதை நகரும். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி உள்ளது. தமிழில் அருள்நிதியும், தெலுங்கில் நவீன் சந்திராவும் நடித்துள்ளனர். என்றார்.