தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் பாடலை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில் தமிழ்நாட்டில் இருந்து சென்றிருக்கும் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வென்று வா வீரர்களே என்ற பாடலை யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து, பாடி வெளியிட்டுள்ளார்.
இந்த ஆல்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு கூடை பந்தாட்ட கழகம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த பாடலை முதல்வர் நேற்று தலைமை செயலகத்தில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் யுவன் சங்கர் ராஜா பங்கேற்கவில்லை.