தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இயல்பான நடிகை எனப் பெயரெடுத்தவர் தமிழ் நடிகையான சாய் பல்லவி. தமிழ் சினிமாவை இவரை இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், தெலுங்கில் இவருக்கு சவாலான கதாபாத்திரங்கள் கிடைத்து அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
நீலகிரியைச் சொந்த ஊராகக் கொண்ட சாய்பல்லவி அவருடைய தாத்தாவின் 85வது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். “வேர்கள், தாத்தாவின் 85வது,” எனக் குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் தாத்தா, பாட்டி, தங்கை ஆகியோரது புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.
தாத்தாவின் 85வது பிறந்தநாளைக் கொண்டாடிய சாய்பல்லவிக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். அவரது பதிவை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளார்கள்.
நெற்றியில் திருநீறு, தலையில் முல்லைப்பூவுடன், புடவையில் நமது பக்கத்து வீட்டுப் பெண் போல தோற்றமளிக்கும் சாய் பல்லவியைப் பார்க்கும் போது 'ரவுடி பேபி' பாடலில் அப்படி ஆடியவரா இவர் என ஆச்சரியப்பட வைக்கிறார்.
விரைவில் தமிழ்ப் படம் ஒன்றில் முதன்மைக் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்படம் அவருக்குத் திருப்புமுனையாக அமையட்டும்.