தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தனுஷை நடிகராக உருவாக்கிய அவரது அண்ணனான டைரக்டர் செல்வராகவன், தொடர்ந்து இயக்குனராகவே வலம் வந்தார். தற்போது சாணிக்காயிதம் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியானதை அடுத்து, சாணிக்காயிதம் படத்தில் தான் நடித்த சில போட்டோக்களை வெளியிட்டிருந்தார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் தற்போது செல்வராகவன் மிரட்டலாக அமர்ந்திருக்கும் ஒரு அதிரடியான போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த போட் டோவில் ஒரு முழுமையான நடிகராக செல்வராகவன் தன்னை வெளிப்படுத்தியிருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.
மேலும், இந்த சாணிக்காயிதம் படத்தில் நடித்து முடித்ததும் அடுத்தபடியாக தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தை ஆகஸ்டு 20-ந்தேதியில் இருந்து செல்வராகவன் தொடங்கயிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.