இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
வெளிநாட்டில் இருந்து கார் இறக்குமதி செய்த விஜய், அதற்கான நுழைவு வரியை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கு குறித்து நீதிபதியின் விமர்சனத்துக்கு உள்ளானதோடு, ரூ.1 லட்சம் அபராதமும் விஜய்க்கு விதிக்கப்பட்டது. பின் மேல்முறையீடு அபராதத்தில் இருந்து இடைக்கால தடை பெற்றார். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் நடிகர் தனுசும் 2018ஆம் ஆண்டில் வெளிநாட்டில் வாங்கிய காருக்கு வணிக வரித்துறை ரூ. 60 லட்சத்து 66 ஆயிரம் நுழைவு வரிவிதித்தது. அதையடுத்து அந்த வரியை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் தனுஷ். அதோடு,50 சதவிகித வரியை செலுத்தினால் காரை பதிவு செய்யவும் வட்டார போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டிருந்தது வணிக வரித்துத்றை. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையின் போது தனுஷ் தரப்பில் யாரும் ஆஜராகாததால் வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 5ம் தேதியான நாளை அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தனுஷின் வழக்கு விசாரணையில் எந்த மாதிரியான தீர்ப்பு வரப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு நிலவத் தொடங்கியிருக்கிறது.