தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் | திருநெல்வேலி செல்ல பாஸ்போர்ட் கேட்க மாரிசெல்வராஜ் | முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி | விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது 'மெர்சல்' | ஆக்டர் ஆன தஞ்சாவூர் டாக்டர் |
சொகுசு கார் இறக்குமதிக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு கேட்டு நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதி சுப்பிரமணியன் வழக்கிற்கான தீர்ப்பை வழங்கினார்.
நடிகர் என்று வழக்கில் குறிப்பிடவில்லை, சாமானிய மனிதர்கள் வரி கட்டும் போது நிங்கள் ஏன் வரி கட்ட மறுக்கிறீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அது குறித்த செய்திகளில் மீடியாக்களில் வெளிவந்ததும் டுவிட்டரில் தனுஷிற்கு எதிராக 'வரிகட்டுங்க தனுஷ்' என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் வந்தது. சிம்பு ரசிகர்கள்தான் அந்த ஹேஷ்டேக்கில் அதிகம் பதிவிட்டு வருகிறார்கள்.
பொதுவாக டுவிட்டர் தளத்தில் விஜய், அஜித் ரசிகர்கள்தான் அதிகம் மோதிக் கொள்வார்கள். இது போன்று சொகுசு கார் இறக்குமதி வரி விவகாரத்தில் விஜய்க்கு கடந்த மாதம் நீதிபதி கண்டனம் தெரிவித்த அன்று கூட 'வரி கட்டுங்க விஜய்' என்பது டிரெண்டானது. அது போலவே இன்று 'வரி கட்டுங்க தனுஷ்' என்பதை டிரெண்டிங் செய்துள்ளார்கள்.
சிம்பு நடிக்கும் அடுத்த படத்திற்கு சிக்கல் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்று தனுஷின் 44வது படம் பற்றிய அறிவிப்பு வந்ததும் தனுஷ் மீதான சிம்பு ரசிகர்களின் கோபத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது.