ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

கபாலி, காலா படங்களுக்கு பிறகு அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பா.ரஞ்சித் இயக்கிய படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஓடிடி தளத்தில் வெளியான இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் சார்பட்டா பரம்பரையின் இரண்டாம் பாகத்தை வெப் சீரிசாக இயக்க உள்ளார், பா.ரஞ்சித். இதனை படத்தை வெளியிட்ட ஓடிடி நிறுவனமே நேரடியாக தயாரிக்கிறது.
இதுகுறித்து பா.ரஞ்சித் கூறியிருப்பதாவது: சார்பட்டா பரம்பரை பற்றி ஒரு வெப் சீரீஸ் இயக்கும் திட்டம் உள்ளது. தமிழ்ப் பிரபா, பாக்கியம் சங்கர் உள்ளிட்ட சில எழுத்தாளர்களுடன் இணைந்து இதன் திரைக்கதையை உருவாக்கி வருகிறேன். சார்பட்டா பரம்பரையின் முன் கதையாக இருக்கும். அதாவது 1925ல் இருந்து தொடங்கும் கதையாக இருக்கும். இப்போதுதான் பணியை தொடங்கி இருக்கிறோம். அது இரண்டாம் பாகமா? வெப் சீரீசா என்பதை இப்போது உறுதியாக சொல்ல முடியவில்லை. என்கிறார் பா.ரஞ்சித்.