2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் |

கர்நாடக மாநிலம் தும்கூரை சேர்ந்தவர் அஷிகா ரங்கநாத். மாடல் அழகியாக தனது கேரியரை தொடங்கியவர், மிஸ்.பெங்களூரு டைட்டில் மூலம் சினிமா நடிகை ஆனார். கிரேஸி பாய் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அடுத்ததாக மாஸ் லீடர் படத்தில் சிவராஜ்குமார் ஜோடி ஆனார். அதன்பிறகு மளமளவென நடிக்க தொடங்கியவர் இப்போது கன்னடத்தின் முன்னணி நடிகையாக இருக்கிறார். கருடா, கொட்டிகோபா 3 படங்களில் நடித்து முடித்துள்ளார். அவதார புருஷா, ரேய்மோ, மதாகஜா படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் லைக்கா தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா ஜோடியாக தமிழில் அறிமுகமாகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம், முழுக்க முழுக்க குடும்ப பாங்கான பொழுதுபோக்கு படமாக உருவாகிறது. இதில் ராஜ் கிரண், ராதிகா சரத்குமார், ஜேபி, ஆர்.கே. சுரேஷ், சிங்கம் புலி, ரவி காளே, சத்ரு, பால சரவணன், ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசை அமைக்கிறார், லோகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். தஞ்சையில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது . படப்பிடிப்பை ஒரே கட்டமாக 50 நாட்களில் முடிக்க, படக்குழு முடிவு செய்துள்ளது.