ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா, அஜ்மல், மணிகண்டன் மற்றும் பலர் நடித்துள்ள 'நெற்றிக்கண்' படம் நாளை(ஆக.,13) ஓடிடியில் வெளியாகிறது. நயன்தாரா நடித்து இதற்கு முன்பு வெளியான 'மூக்குத்தி அம்மன்' படமும் ஓடிடி தளத்தில்தான் வெளியானது. அப்படத்தின் விளம்பரங்களில் நயன்தாரா புறக்கணிக்கப்பட்டாலும் அவருக்காக அப்படத்தைப் பார்த்தவர்கள் அதிகம்.
ஓடிடி மூலம் மக்களிடம் நேரடியாகச் செல்ல முடிகிறது என்பதைப் புரிந்து கொண்டதால் தான் 'மூக்குத்தி அம்மன்' புறக்கணிப்பு விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டு 'நெற்றிக்கண்' படத்திற்காக டிவி பேட்டி வரை நயன்தாரா சென்றிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
இப்படத்தில் நயன்தாரா கண்பார்வையற்றவராக நடித்துள்ளார். 2011ல் வெளிவந்த கொரியன் படமான 'பிளைன்ட்' படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்தான் இந்தப் படம்.
டிரைலரைப் பார்த்த போது மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்த, 'சைக்கோ' படம் போலவே இருந்தது. இருந்தாலும், நயன்தாரா நடிப்பதால் 'நெற்றிக்கண்' படத்திற்கு தனி வரவேற்பு இருக்க வாய்ப்புள்ளது.
தனது முந்தைய வெளியீடான 'மூக்குத்தி அம்மன்' போலவே ஓடிடியிலும் 'நெற்றிக்கண்' படத்தையும் ஹிட் கொடுப்பாரா நயன்தாரா என்பது நாளை தெரிந்துவிடும்.