இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மைக்கேல் ராயப்பன் தயாரித்த ‛அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்ததில் இருந்தே சிம்புவுடன் அவருக்கு மோதல் வெடித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது கவுதம்மேனன் இயக்கும் ‛வெந்து தணிந்தது காடு' படத்தில் நடிக்கிறார் சிம்பு. இந்த படம் தொடங்கப்பட்டதில் இருந்தே பெப்ஸிக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்குமிடையே பிரச்னை வெடித்துள்ளது.
இந்தநேரத்தில் சிம்புவின் தாயாரான உஷா ராஜேந்தர், தனது மகன் சிம்புவுக்கு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் இன்னும் ரூ.3.50 கோடி சம்பள பாக்கி தர வேண்டியுள்ளதாக ஒரு வீடியோவில் தெரிவித்திருந்தார். இதையடுத்து தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்து மைக்கேல் ராயப்பன், ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், ரூ.3.50 கோடி சம்பளம் தர வேண்டும் என்று உஷா ராஜேந்தர் சொல்வது அப்பட்டமான பொய் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சிம்பு எனக்கு இன்னொரு படத்தில் நடித்து தரவேண்டுமென்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட சொன்னேன். அதற்காகத்தான் நான் ரூ.75 லட்சம் தருவதாக கூறியிருந்தேன். ஆனால் இப்போதுவரை சிம்பு அந்த ஒப்பந்ததை என்னிடம் தரவில்லை. மேலும் நான் அவர்களுக்கு கொடுத்த ஒரு செக் பவுன்ஸ் ஆகிவிட்டது. அதற்கு அடுத்த நாள் அதே தொகைக்கான டிடி எடுத்து அவர்களுக்கு கொடுத்து விட்டேன். ஆனால் இப்போதுவரை அந்த செக்கை அவர்கள் என்னிடம் திருப்பித்தரவில்லை என்றும் சிம்பு மீதான தனது குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.