தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சோசியல் மீடியாவில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு வந்த நடிகை மீரா மிதுன், சமீபத்தில் பட்டியலினத்தவரை தவறாக சித்தரித்து ஒரு வீடியோ வெளியிட்டார். அதையடுத்து விசிக.,வின் வன்னி அரசு அவர் மீது காவல்துறையில் புகார் அளித்தார். அதையடுத்து மீரா மிதுன் மீது 7 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் அவரை ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால் மீரா மிதுனோ அதை ஏற்காமல், என்னை யாரும் கைது செய்ய முடியாது என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டார்.
இந்தநிலையில், தலைமறைவான மீராமிதுனை சைபர்கிரைம் போலீசார் கேரளாவில் நேற்று (ஆக.,14) கைது செய்தனர். அவரை கைது செய்யச் சென்றபோதும் போலீசாரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்த மீராமிதுனை பெண் போலீசார் மடக்கி கைது செய்துள்ளனர். இந்நிலையில், மீரா மிதுன் கைது குறித்து அவரது சக பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை சனம் ஷெட்டி தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், மீரா மிதுனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சரியான நடவடிக்கை எடுத்திருக்கிறார். கடந்த சில வருடங்களாக நாங்கள் சகித்துக் கொண்டு வந்த அனைத்து வெறுக்கத்தக்க பேச்சுக்களும் இனிமேல் முடிவுக்கு வந்து விடும் என்று பதிவிட்டுள்ளார்.