மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
சர்ச்சைக்கு பெயர் பெற்ற நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் திரையுலகினர் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு பலரது கண்டனத்திற்கு ஆளாகி வந்தார். சமீபத்தில் பட்டியலின மக்கள் குறித்து அவதுாறாக பேசி, வீடியோ ஒன்றை வெளியிட்டார். போலீசார் அவர் மீது ஏழு பிரிவுகளில் வழக்கு பதிந்து, விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் மீரா மிதுனோ அதை ஏற்காமல், என்னை யாரும் கைது செய்ய முடியாது என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டார்.
இந்நிலையில், மீரா மிதுனை கேரளாவில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்து, சென்னை கொண்டு வந்தனர். முன்னதாக கைதாகும் போது கதறி அழுதபடி ஒரு வீடியோ வெளியிட்டார் மீரா மிதுன். அதில் போலீசார் தன் மீது கை வைத்தால் கத்தியை எடுத்து என்னை நானே குத்திக் கொண்டு தற்கொலை செய்வேன் என மிரட்டலும் விடுத்தார்.
சென்னை அழைத்துவரப்பட்ட மீரா மிதுனை, சைதாப்பேட்டை நீதிபதிகள் குடியிருப்பில் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, மீராமிதுனை வருகிற 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனிடையே, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் குறித்து மீரா மிதுன் பேசியிருந்த வீடியோவில் உடனிருந்த அவரது ஆண் நண்பர் அபிஷேக் ஷாம் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். முன்னதாக, விசாரணைக்கு ஒத்துழைக்காமலும், வழக்கிற்கு சம்பந்தமில்லாமலும் மீராமிதுன் ஏதேதோ பேசுவதாகவும், கமிஷனரை வரச்சொல்லி மீராமிதுன் அடம்பிடிப்பதாகவும் போலீசார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.