விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
ஒரு சில படங்களில் சிறிய கேரக்டரில் நடித்தவர் மீரா மிதுன். சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக பேசி அதன் மூலம் பிரபலமானார். இந்த நிலையில் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் குறித்து, அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக புகார் அளிக்கப்பட்டு இருந்தது. பின்னர் இது குறித்து சென்னை மத்திய குற்றவியல் பிறவு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது ஜாமீனில் விடுதலையாகி இருக்கும் மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று இரண்டு முறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனால் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசார் மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்தவில்லை. போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “மீரா மிதுன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரது செல்போன், சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அதனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை தொடர்ந்து தேடி வருகிறோம்” என்றார்.
இதை தொடர்ந்து வழக்கை அடுத்த மாதம் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதமன்றம் உத்தரவிட்டது.