புதிதாக கபே தொடங்கிய நண்பருக்கு சல்மான் கான் எச்சரிக்கை | தெலுங்கில் நான் தேடிப்போகிறேன்... தமிழிலோ என்னை தேடி வருகிறது. ; நடிகர் சந்தீப் கிஷன் | கணவருடன் ஷூட்டிங்கை முடித்த கையோடு அவரது தம்பி பட புரமோஷனில் பங்கேற்ற ராஷ்மிகா | சிவகாமியின் செல்வன், முத்து, தாய் கிழவி - ஞாயிறு திரைப்படங்கள் | அரசியலுக்கு வருகிறேனா? ரவிமோகன் சொன்ன விளக்கம் | மோகன்லாலின் 'அதிமனோகரம்' படப்பிடிப்பு நிறைவு | கரீனா கபூருக்கு டப்பிங் குரல் கொடுக்கும் பார்வதி | தியேட்டரில் கிளாடியேட்டர்ஸ் டிரைலர் | முதல் இடத்தை நோக்கி முன்னேறுகிறாரா மமிதா பைஜூ? | பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன் |

நடிகை மற்றும் மாடாலான மீரா மிதுன் பிக்பாஸ் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த அவர் பல்வேறு சர்ச்சையான கருத்துகளை பேசி பலரிடமும் வெறுப்பை சம்பாதித்தார். இதன் காரணமாக இவர் மீது வழக்குகள் தொடரப்பட்டது. அந்த வழக்குகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற விசாரணையையும் எதிர்க்கொண்டு வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் தனக்கு சாவதை தவிர வேறு வழியில்லை என்று கூறி கதறி அழுதுள்ளார்.
அந்த வீடியோவில், 'என்னுடைய சாதனைகள் எதுவும் வெளியே தெரியவில்லை என்ற ஆதங்கத்தில் அப்படி பேசிவிட்டேன். இன்று, என் பெற்றோரும் என்னை சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள். கடந்த 6 மாத காலமாக என் மீது தொடர் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. நீதிமன்றத்துக்கு வழக்குகள் தொடர்பாக அலைந்து திரிவதால் வருமானத்துக்கே வழியில்லை. சாப்பாட்டுக்கே வழியில்லை. இந்த சமூகம் என்னை வாழ முடியாமல் செய்கிறது. இனிமேலும் என்னை இந்த சமூகம் வாழ விடவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன்' என்று அவர் அதில் பேசியுள்ளார். மீரா மிதுன் மனமுடைந்து கதறி அழும் இந்த வீடியோவை பார்த்து அவரை ட்ரோல் செய்த நெட்டிசன்கள் கூட பரிதாப்பட்டு வருகிறார்கள்.