ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் திரையுலகில் 80-களில் முன்னணி நடிகராக இருந்த அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர், 'தும்பா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். பிறகு தனது அப்பா அருண் பாண்டினும் இணைந்து 'அன்பிற்கினியாள்' என்ற படத்தில் நடித்தார். அப்பா - மகள் உறவு குறித்து பேசிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த படத்திற்கு பிறகு புதிய படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி பாண்டியன். தற்போது கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். கண்ணகி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டர் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கீர்த்தி பாண்டியன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர், தொடர்ந்து தனது சினிமா குறித்த செயல்பாடுகளை தெரிவித்து வரும் கீர்த்தி பாண்டியன், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கடற்கரை ஒன்றில் நீச்சலுடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி பாண்டியன் ஹிந்தி நடிகைகளுக்கு கடும் போட்டி தரும் வகையில் இருப்பதாக கமெண்டில் கூறி வருகின்றனர்.