ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் மற்றும் பலர் நடிக்கும் 'சாணிக் காயிதம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் முதல் பார்வை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அறிவித்தனர். தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக அறியப்பட்ட செல்வராகவன் இப்படம் மூலம் நடிகராகவும் அறிமுகமாக உள்ளார்.
இப்படத்தின் அருண் மாதேஸ்வரன் ஏற்கெனவே 'ராக்கி' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். தரமணி படத்தில் கதாநாயகனாக நடித்த வசந்த் ரவி அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
'சாணிக் காயிதம்' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தின் முதல் பார்வை வெளியானதிலிருந்தே ஏதோ ஒரு 'சம்பவம்' செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
கொரோனா அலைகளைத் தாக்குப் பிடித்து தற்போது படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்கள். “சாணிக் காயிதம்' படப்பிடிப்பு முடிந்தது. என்ன ஒரு அற்புதமான பயணம், நிறைய கற்றுக் கொண்டேன், நட்சத்திரங்களுக்கும், குழுவினருக்கும் நன்றி,” என செல்வராகவன் குறிப்பிட்டுள்ளார்.