இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சென்னை : நடிகர் ஆர்யா போல நடித்து, திருமண ஆசை காட்டி, ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண்ணிடம் 70.40 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.
ஜெர்மன் குடியுரிமை பெற்று வசிப்பவர் வத்ஜா. இலங்கை பெண்ணான இவர், சில மாதத்திற்கு முன், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு, மின்னஞ்சலில் ஒரு புகார் அளித்தார்.
அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: நடிகர் ஆர்யா என்னை திருமணம் செய்வதாகக் கூறி, 70.40 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்துவிட்டார். இது அவரது தாய்க்கும் தெரியும். இருவர் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகார், தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். இந்த மோசடி குறித்து, நடிகர் ஆர்யாவுக்கு சம்மன் அனுப்பி, அவரிடம் 1:30 மணி நேரத்திற்கு மேல் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர்.
விசாரணையில் சென்னை, புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான், 29, என்பவர், ஆர்யா போல நடித்து, வாட்ஸ் ஆப் வாயிலாக வத்ஜாவுக்கு காதல் வலை வீசியுள்ளார். பின், திருமணம் செய்வதாக 70.40 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததும், இதற்கு அவரது மைத்துனர் முகமது ஷூசைனி, 35, என்பவர் துணையாக இருந்ததும் தெரிந்தது.
இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்டம், பெரும்புலிப்பாக்கத்தில் பதுங்கி இருந்த முகமது ஷூசைனி, முகமது அர்மான் ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.