திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்தார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து குழந்தை பெற்றுக் கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். சமீபத்தில் ஜார்ஜ் சம்பந்தப்பட்ட போட்டோக்களை இன்ஸ்டாவிலிருந்து நீக்கினார். இதனால் இருவருக்கும் பிரச்னை என்று கூட செய்தி வந்தது.
சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வார். குழந்தை பெற்ற பிறகும் கவர்ச்சிக்கு குறைவில்லாமல் முன்பை போலவே வாழ்க்கையை ஜாலியாக அனுபவித்து வாழ்ந்து வருகிறார். குழந்தை பிறந்த பின்னர் எமி ஜாக்சன் தனது பழைய புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு வந்தார்.
குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே மீண்டும் பழைய உடலமைப்புக்கு திரும்பினார். அதைக் காட்டும் வகையில் சமீபத்தில் படுகவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஆச்சர்யம் அளித்துள்ளார். இந்நிலையில் எமி ஜாக்சன் தன்னுடைய பிகினி உடையை காயப்போட்டுள்ள புகைப்படம் ஒன்றை பதிவிட்டு. சம்மர் முடிந்து விட்டது அதான் இப்படி என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த சமூகவலைதள ரசிகர்கள் தங்கள் அருவருப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.