லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
பிரபாஸின் 21வது படத்தை மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்குகிறார். தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சமந்தாவை அணுகியதாகவும், ஆனால் அவர் சில காரணங்களால் மறுத்து விட்டதாகவும் ஒரு தகவல் பேசப்பட்டு வந்தது. ஏற்கனவே நாக் அஸ்வின் இயக்கிய மகாநடி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சமந்தா. இந்த நிலையில் அதுகுறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார் சமந்தா.
“இயக்குனர் நாக் அஸ்வினிடம் எனக்கு ஏன் உங்களது படத்தில் ஒரு கதாபாத்திரம் கொடுக்கவில்லை என்று இப்போது அவருக்கு மெசேஜ் செய்து கேட்கப் போகிறேன், அப்படி இல்லை என்றால் இந்த படத்தில் எனக்காக நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள் என்றும் கேட்கப் போகிறேன்” என கூறியுள்ளார் சமந்தா. இதன் மூலம் இப்போது வரை பிரபாஸ் படத்தில் சமந்தா ஒப்பந்தம் ஆகவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.