ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து கதாநாயகனாக உயர்ந்தவர் சந்தானம். அவர் நடித்து எப்போதோ வெளிவர வேண்டிய 'சர்வர் சுந்தரம்' படம் அடுத்தடுத்து பல்வேறு காரணங்களால் வெளியீடு தள்ளிக் கொண்டே வந்தது.
கடைசியாக கடந்த வருடம் ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டார்கள். ஆனால், அப்போது சந்தானம் நடித்த மற்றொரு படமான 'டகால்டி' படத்தை வெளியிட அதன் தயாரிப்பாளர் முடிவு செய்தார். பின்னர் நடைபெற்ற பஞ்சாயத்தில் 'சர்வர் சுந்தரம்' படத்தை இரண்டு வாரங்களுக்குத் தள்ளி வைத்தார்கள். ஆனால், அப்போதும் அப்படம் வெளிவரவில்லை.
பட வெளியீடு குறித்து அதன் இயக்குனர் பால்கி பல முறை அவருடைய வருத்தத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று ரசிகர் ஒருவர் சந்தானத்திடம் இன்ஸ்டாகிராமில் பட வெளியீடு குறித்து கேட்டதற்கு, படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று சொன்னார் சந்தானம்.
இப்படத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா, நாகேஷ் பேரன் பிஜேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.