வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

கேரளாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் கோயில்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, குருவாயூர் மற்றும் சபரிமலை ஐயப்பன் கோயில்களில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா பாதுகாப்பு கருதி கடந்த பல ஆண்டுகளாக குருவாயூர் கோயில் வளாகத்திற்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல நடிகர் மோகன்லால் தனது மனைவியுடன் குருவாயூர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் வந்தார்.
அப்போது, அவர் காரை கோயிலின் பிரதான நுழைவாயில் வரை செல்ல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அனுமதித்தனர். இந்த படங்களும் வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகின. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்த 3 ஊழியர்களை, கோயில் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.