திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
தெலுங்குத் திரையுலகில் நடிகர் சங்கத்திற்கென 'மூவி ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன்' என்ற சங்கம் உள்ளது. அந்த சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது.
இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் தலைமையிலான அணிக்கும், மஞ்சு விஷ்ணு தலைமையிலான அணிக்கும்தான் கடுமையான போட்டி உள்ளது. கன்னட நடிகரான பிரகாஷ்ராஜ் எப்படி தெலுங்குத் திரையுலகத்தில் உள்ள சங்கத்திற்குப் போட்டியிடலாம் என்ற சர்ச்சை எழுந்தது. அதன்பின் அது அப்படியே அடங்கிப் போனது.
இந்நிலையில் தற்போது தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு நடிகர் சங்கர் உறுப்பினர்கள் பலருடன் சந்திப்பு ஒன்றை நடத்தினார் பிரகாஷ்ராஜ். அப்போது அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தால் சங்கத்திற்காக 10 கோடி ரூபாயை நன்கொடை தருவதாக அறிவித்துள்ளாராம். அவ்வளவு பெரிய தொகையை பிரகாஷ்ராஜ் அறிவித்தது குறித்துதான் தெலுங்குத் திரையுலகத்தில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னணி ஹீரோக்கள் பலரும் பிரகாஷ்ராஜுக்கு அவர்களது ஆதரவுகளைத் தெரிவித்துள்ளார்களாம்.