இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமாவில் கடந்த பத்து வருடங்களில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தைப் பிடித்தவர் விஜய் சேதுபதி. சின்னச்சின்னக் கதாபாத்திரங்களில் நடித்தவர் 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் தனி நாயகனாக நடித்து கவனம் பெற்றார். அதன்பின் அவர் நாயகனாக நடித்து 2012ல் வெளிவந்த 'பீட்சா' படம் அவருக்கு பெரிய திருப்புமுனையைப் பெற்றுத் தந்தது.
அதன்பின் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா' என தொடர்ச்சியாக வெற்றிப் படங்களைக் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அடுத்தடுத்து பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அவரைப் பற்றி அதிகம் பேச வைத்தார். அதன்பிறகு, கடந்த சில வருடங்களில் அதிகப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் விஜய் சேதுபதி.
2018ல் வெளிவந்த '96' படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த படங்கள் பெரிய வெற்றயைப் பெறவில்லை. இந்த ஆண்டு துவக்கத்தில் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் வில்லனாகத்தான் நடித்திருந்தார். அப்படத்தில் கூட அவரது வில்லத்தன நடிப்பு அதிகம் பேசப்பட்டது.
அந்தப் படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்து கடந்த பத்து நாட்களில் 'லாபம்' படம் தியேட்டரிலும், 'துக்ளக் தர்பார்' படம் டிவியிலும், 'அனபெல் சேதுபதி' படம் ஓடிடி தளத்திலும் வெளியானது. இந்த மூன்று படங்களுமே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படங்களைப் பற்றி விமர்சகர்கள் விமர்சித்ததை விட ரசிகர்கள் மிகக் கடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்தார்கள்.
விஜய் சேதுபதிக்கு என்ன ஆச்சு, ஏன் இது மாதிரியான படங்களில் அவர் நடிக்கிறார். நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் கதைகளிலும், கதாபாத்திரங்களிலும் கவனம் செலுத்தவில்லையா என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மூன்று படங்களிலுமே அவருடைய நடிப்பு சரியில்லை என்பதே ரசிகர்களின் பொதுவான கருத்தாக உள்ளது. இதெல்லாம் விஜய் சேதுபதி கவனிப்பாரா, அல்லது அவர் போக்கில் செல்வாரா?. விஜய் சேதுபதி நடித்துள்ள 'கடைசி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர்,' படங்கள் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்புள்ளது.