திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
5 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார் வடிவேலு. அவர் முதலில் நடிக்க இருக்கும் படமான நாய் சேகருக்கு டைட்டில் பிரச்சினை இருந்தாலும் ஒரிஜினல் நாய் சேகர் என்ற டைட்டிலுடன் படம் தயாராக இருக்கிறது. லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. ஒன்றிரண்டு படங்களில் கதையின் நாயகனாக நடித்து விட்டு பிறகு காமெடி கேரக்டர்களில் மட்டுமே நடிக்க வடிவேலு முடிவு செய்திருக்கிறார்.
வடிவேலுவின ரீ-என்ட்ரிக்கு பலரும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராணயன் தனது மனைவி மற்றும் மகளும் பாடகியுமான என்ஞாமி புகழ் தீ ஆகியோருடன் வடிவேலுவை சந்தித்தார். லைகா நிறுவனம் தயாரிப்பில் வடிவேலு நடிக்கும் படத்திற்கு சந்தோஷ் நாராணயன் இசை அமைக்கிறார். அதற்கான சந்திப்பு இது என்று கூறப்படுகிறது. பாடகி தீ வடிவேலுவின் பரம ரசிகை அவரது விருப்பத்திற்காக இந்த சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது.