ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சென்னை, பல்லாவரத்தைச் சேர்ந்த சமந்தா தமிழில் கதாநாயகியா அறிமுகமான 'பாணா கதாத்தாடி' படம் 2010ம் ஆண்டு வெளிவந்தது. தமிழில் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அதற்கு முன்பு நடித்த சமந்தா, அப்படத்தின் தெலுங்கு பதிப்பில் கதாநாயகியாக அங்கு அறிமுகமானார்.
அதன்பின் பல தெலுங்குப் படங்களில் நடித்த சமந்தா, ஹைதராபாத்தில் வசிக்க ஆரம்பித்தார். தனது முதல் தெலுங்குப் படத்தில் ஜோடியாக நடித்த நாக சைதன்யாவைக் காதலித்து கல்யாணமும் செய்து கொண்டார். நான்கு வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இருவரும் விவகாரத்து செய்ய உள்ளதாக கடந்த சில வாரங்களாக பரபரப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் 'சாட்' செய்த சமந்தா ரசிகர் ஒருவர் “நீங்கள் நிஜமாகவே மும்பைக்கு மாறுகிறீர்களா' எனக் கேட்ட கேள்விக்கு, “எப்படி இப்படி வதந்தி ஆரம்பமானது எனத் தெரியவில்லை. இது போல 100 வதந்திகள் இருக்கிறது, எதுவும் உண்மையில்லை. ஐதராபாத் தான் எனது வீடு, எப்போதும் எனக்கு வீடு. ஐதராபாத் தான் எனக்கு ஒவ்வொன்றையும் வழங்கியது, நான் இங்கேயே தான் வசிப்பேன்,” என பதிலளித்துள்ளார்.
இதனிடையே நாக சைதன்யா நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'லவ் ஸ்டோரி' படத்தின் வெற்றி விழாவில் நாகார்ஜுனா கலந்து கொண்டு சிறப்பித்தார். அந்த விழாவில் கூட சமந்தா கலந்து கொள்ளவில்லை. இதையும் கூட சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.
நாக சைதன்யா, சமந்தா இருவரும் வெளிப்படையாகப் பேசும் வரை இது போன்ற பரபரப்புகள் இருந்து கொண்டேதான் இருக்கும்.