ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழில் 'சுல்தான்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தானா. கன்னட நடிகையான ராஷ்மிகா தெலுங்கில் அறிமுகமாகி சில பல சூப்பர் ஹிட்களைக் கொடுத்து குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர். தற்போது அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் 'புஷ்பா' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் ராஷ்மிகாவின் கதாபாத்திர அறிமுகப் போஸ்டரை இன்று படக்குழுவினர் வெளியிட்டார்கள்.
'ஸ்ரீவள்ளி' என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடிக்கும் அந்தப் போஸ்டர் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படியே அச்சு அசல் கிராமத்துப் பெண்ணாக மாறியிருக்கிறார் ராஷ்மிகா. நிறைய எண்ணெய்யுடன் கூடிய அழுந்த வாரிய தலை, ஒரு பக்க மூக்குத்தி, புடவை அணிவதற்கு முன்பாக தன்னை அழுகுபடுத்திக் கொள்ளும் விதத்தில் காதில் கம்மள் அணியும் ராஷ்மிகா, உட்கார்ந்திருக்கும் விதமே அப்படியே கிராமத்துப் பெண் போலவே உள்ளது.
திருமணத்திற்கு முன்பு தன்னை அலங்கரித்துக் கொள்கிறாரா அல்லது ஏதோ ஒரு விசேஷத்திற்கு செல்வதற்காக இந்த அலங்காரமா என்பது தெரியவில்லை. பக்கா மாடர்ன் பெண்ணான ராஷ்மிகாவை இப்படி மாற்றிவிட்டார்களே என ரசிகர்கள் அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த வருட கிறிஸ்துமஸ் விடுமுறையில் 'புஷ்பா' படத்தின் முதல் பாகம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தியேட்டர்களில் வெளியாகிறது.