இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
திரையுலகில் ஒன்றாக இணைந்து நடிக்கும்போது காதல் வசப்பட்ட நட்சத்திரங்கள் திருமண பந்தத்தில் இணைவது அவ்வப்போது நடக்கும் நிகழ்வுதான். அஜித்-ஷாலினி போல அழகாக நீடிக்கும் திருமண பந்தங்களும் உண்டு. இயக்குனர் விஜய்-அமலாபால் போல குறுகிய காலத்திலேயே முறிந்து போகும் திருமணங்களும் உண்டு. அந்த வகையில் நடிகை சமந்தா நடிகர் நாகசைதன்யா திருமண உறவிலும் மிகக்குறுகிய காலத்திலேயே விரிசல் விழுந்து விட்டதோ என்று நினைக்கும் அளவிலேயே சமீபத்திய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன
இவர்களது திருமணம் நடைபெற்று இன்னும் நான்கு வருடங்கள் கூட நிறைவு பெறாத நிலையில், கடந்த சில வாரங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்கின்றனர் என்றும் விவாகரத்து பெறப்போகின்றனர் என்றும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளும் அதை உறுதிப்படுத்துவது போலவே இருக்கின்றன. அதேசமயம் இவற்றை அவர்கள் இருவரும் நேரடியாக மறுக்கவோ விளக்கம் சொல்லவோ இல்லை.
இந்தநிலையில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இவர்களது நான்காவது திருமண நாள் வருகிறது. கண்டிப்பாக அன்றைய தேதியில் இவர்கள் இருவரும் சேர்ந்து தான் வாழ்கிறார்கள் என்பதற்கான ஆதார செய்தியோ புகைப்படமோ அல்லது வாழ்த்தாவது நிச்சயம் வெளியாகும். இல்லையென்றால், மீடியாக்களில் வருவதுபோல இவர்கள் இருவரின் பிரிவும் உண்மைதான் என்பது நிச்சயமாகத் தெரிந்து விடும். அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்