தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சசிகுமார் நடித்த, ‛சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் மீண்டும் சசிகுமார் உடன் இணைந்து இயக்கியுள்ள படம் ‛கொம்பு வச்ச சிங்கம்டா'. நாயகியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க, முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடித்துள்ளார். இவர்களுடன் மறைந்த இயக்குனர் மகேந்திரனும் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் டிரைலர் வெளியானது.
‛இப்பல்லாம எவன் முகத்தாயாவது பார்த்து நல்லவன், கெட்டவன் யாருனு சொல்லிரு பார்ப்போம், இங்க எல்லாரும் நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க..., இனி இவனுங்களோடதான் நம்ம வாழ்ந்தாகனும்' என்ற இப்படத்தின் வசனம் ரசிகர்களால் கவரப்பட்டுள்ளது. ‛குத்துனது நண்பனா இருந்தா... செத்தா கூட சொல்லக்கூடாது' என்ற வசனத்தை ரசித்த ‛சுந்தரபாண்டியன்' ரசிகர்கள் கொம்புவச்ச சிங்கம்டா படத்தையும் வரவேற்பர் என்கின்றனர் படக்குழுவினர்.