படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

சினிமாவில் நடித்த கதாபாத்திரம் போலவே நிஜத்திலும் நடந்து கொண்டு நைஜீரிய நடிகர் ஒருவர் கைதாகியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்தலை மையமாக வைத்து சூர்யா-ஹரி கூட்டணியில் சிங்கம்-2 படம் உருவாகி இருந்தது. இந்தப்படத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள தமிழக வில்லன்களுக்கு உதவும் நைஜீரிய வில்லனாக டேனி சபானி என்கிற நைஜீரிய நடிகர் நடித்திருந்தார்.
அந்தப்படத்தில் போதைப்பொருள் கடத்தலில் அவரது உதவியாளராக உடன் நடித்தவர்களில் ஒருவர் தான் செக்வுமே மால்வின் என்பவர். அவர்தான் தற்போது நிஜத்திலும் போதைப்பொருள் கடத்தியதாக நைஜீரிய போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு தற்போது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யமாக பேசப்பட்டு வருகிறது.