ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் விஜய்தேவரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் படத்திற்கு பிறகு பிரபலமாகிவிட்டார். தமிழில் சுல்தான் என்ற படத்தில் அறிமுகமானவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வருகின்றன. ஆனபோதிலும் தெலுங்கு, ஹிந்தியில் பிசியாக நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டில் ஐதராபாத்தில் ஒரு வீடு வாங்கிய ராஷ்மிகா அதன்பிறகு ஹிந்தி படங்களில் நடிப்பதற்காக மும்பை சென்றபோது அங்கு இன்னொரு வீட்டை வாங்கினார். தற்போது கோவாவிலும் ஒரு வீடு வாங்கியுள்ள ராஷ்மிகா, அந்த வீட்டின் நீச்சல் குளத்திற்கு அருகில் அமைந்துள்ள புத்தர் சிலையுடன் கூடிய போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.