ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ், தெலுங்குத் திரையுலகங்களில் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வந்தது சமந்தா, நாக சைதன்யா பிரிவு விவகாரம். சில தினங்களுக்கு முன்பு இருவரும் தங்களது பிரிவைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சினிமா பிரபலங்கள் யாரும் சர்ச்சையான கருத்துக்களை வெளியிடவில்லை.
ஆனால், 'தலைவி' பட நாயகியான கங்கனா ரணவத், அவர்கள் பிரிவு குறித்து தெரிவித்த சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. ஆண்கள் செய்யும் தவறுகளால்தான் விவகாரத்துக்கள் ஏற்படுகின்றன என்று கூறியிருந்தார். மேலும், பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நாக சைதன்யா பழக ஆரம்பித்த பிறகு இது நடந்திருக்கிறது. அந்த சூப்பர் ஸ்டார் விவகாரத்துக்கு திறமையானர் எனக் குறிப்பிட்டிருந்தார். ஆமீர் கானுடன் நாக சைதன்யா ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார். அவரைத்தான் மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, நாக சைதன்யாவின் மாமாவான தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் இன்ஸ்டா ஸ்டோரியில், “நாம் வாயைத் திறப்பதற்கு முன் நம் மனதைத் திறக்க வேண்டும். மனம் என்பது எண்ணங்களின் போக்குவரத்து. உங்கள் வழியை கவனமாகத் தேர்ந்தெடுங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
கங்கனாவுக்குத்தான் வெங்கடேஷ் இப்படி மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளார் என்கிறது டோலிவுட் வட்டாரம். எந்தவிதமான சர்ச்சைப் பதிவுகளையும் பதிவிடாத வெங்கடேஷ் இப்படி பதிவிட்டிருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.