திருநெல்வேலி செல்ல பாஸ்போர்ட் கேட்க மாரிசெல்வராஜ் | முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி | விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது 'மெர்சல்' | ஆக்டர் ஆன தஞ்சாவூர் டாக்டர் | சினிமாவை விட்டு விலகப்போகிறேன்: மிஷ்கின் சொல்கிறார் | இமான் இசை நிகழ்ச்சி ரத்து |
தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் நடந்து முடிந்திருக்கிறது. பரபரப்புக்கு காரணம் பிரகாஷ்ராஜ். ஹீரோக்கள் ஆதிக்கம் நிறைந்த தெலுங்கு சினிமாவில் வில்லன் பிரகாஷ்ராஜ் தலைவராக போட்டியிட்டதும், பிரகாஷ்ராஜ் கன்னடர் என்பதும்தான் பரபரப்புக்கு காரணம். கன்னடரான பிரகாஷ்ராஜ் தெலுங்கு நடிகர் சங்கத் தலைவர் ஆவதா என்ற கோஷம் கிளம்பியது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.
பிரகாஷ்ராஜை எதிர்த்து போட்டியிட்ட ஜீவிதா பின்னர் அவர் அணியிலேயே சேர்ந்தார். பிரகாஷ்ராஜுக்கு சிரஞ்சீவி குடும்பத்தினர் ஆதரவு அளித்தனர், அவரை எதிர்த்து போட்டியிட்ட விஷ்ணு மஞ்சுவுக்கு என்டிஆர் குடும்பத்தினர் ஆதரவு அளித்தனர். விஞ்சு மஞ்சு பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன். இதனால் இந்த முறை தேர்தல் பொது தேர்தல் போல நடந்தது.
நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளிவந்தது. இதில் தலைவராக விஷ்ணு மஞ்சு வெற்றி பெற்றார். அவர் பிரகாஷ்ராஜை விட கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இது தவிர மற்ற பதவிகளுக்கு வெற்றி பெற்றவர்களும் பெரும்பாலும் விஷ்ணு மஞ்சு அணியினர் தான்.
துணை தலைவர்களாக ஸ்ரீகாந்த், மதலரசி ஆகியோரும், ரகுபாபு பொது செயலாளராகவும், அறங்காவலராக சிவா பாலாஜியும், இணை செயலாளராக கவுதம் ராஜும் வெற்றி பெற்றனர். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பிரகாஷ்ராஜும், பொது செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகை ஜீவிதாவும் தோல்வி அடைந்தார்கள்.
நேற்று நடந்த வாக்குபதிவில் முன்னணி நடிகர்களான மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன், பிரபாஸ், ரவி தேஜா மற்றும் நாக சைதன்யா போன்றவர்கள் வாக்களிக்கவில்லை.