ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் தொலைக்காட்சியில் பிரபலமான நட்சத்திரங்கள் பங்குபெறும் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியும் ஒன்று. இதில் 12 ஜோடிகள் பங்கேற்று வந்தனர். பல போட்டிகள், சவால்கள் கொண்ட இந்த நிகழ்ச்சியில் வாரவாரம் ஒரு ஜோடி எலிமினேட் ஆகி வந்தது. நிகழ்ச்சியின் இறுதிகட்டத்தில் டாப் 5 ஜோடிகள் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். வைல்டு கார்ட் எண்ட்ரியாக மேலும் ஒரு ஜோடி கலந்துகொள்ள, 6 ஜோடிகள் பைனலில் மோதியது. இந்த விறுவிறுப்பான இறுதி போட்டியில் சரத் - கிருத்திகா ஜோடி வெற்றி பெற்று டைட்டிலை கைப்பற்றியது. மேலும், பரிசுத்தொகையாக ரூ. 10 லட்சத்தையும் வென்றது. இவர்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.