இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சின்னத்திரை ரசிகர்களை கவரும் வகையில் ஜீ தமிழ் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் சர்வைவர் நிகழ்ச்சியை கொண்டு வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இந்த நிகழ்ச்சி வரவேற்பு பெற்றது.
நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் வெள்ளித்திரை நடிகர்கள் விக்ராந்த், நந்தா, பெசன்ட் ரவி, தம்பி ராமையாவின் மகன் உமாபதி , விஜயலட்சுமி, காயத்ரி ரெட்டி, சிருஷ்டி டாங்கே, வி.ஜே.பார்வதி உள்ளிட்ட மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
கடுமையான சவால்களை சமாளித்து முதல் 5 இடங்களில் உமாபதி, சரண், விஜயலக்ஷ்மி, லக்கி நாராயண், மற்றும் வெனஸ்ஸா க்ரூஸ் ஆகியோர் தேர்வாகினர். சர்வைவரின் கிராண்ட் பினாலே டிசம்பர் 12-ம் தேதி நடைபெற்றது. காண்போர் ஒவ்வொருவரின், இதயத்துடிப்பையும் அதிவேகமாக்கிய இறுதிச்சுற்றில், சவாலான போட்டியில் இறுதிவரை சரணும், விஜியும் சுமார் 70 நிமிடங்களுக்கு மேல் தாக்கு பிடித்தனர். நிகழ்ச்சியில் நடிகை விஜயலக்ஷ்மி தனிநபராக 'சர்வைவர்' பட்டத்தை வென்றதோடு, ரொக்கப்பரிசான ரூபாய் 1 கோடியையும் பெற்றார்.
மற்ற போட்டியாளர்களைப் போல, விஜயலக்ஷ்மியும் இந்த சீஸன் முழுவதும் பல்வேறு தோல்விகளையும், காயங்களையும் எதிர்கொண்டார், ஆனால் அவரது விடாமுயற்சி மற்றும் மன உறுதியுமே அவரை மீண்டும் போட்டிக்குள் உயிர்ப்புடன் தொடர உதவின. இந்த சீஸனின் பாதியில் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு, 'மூன்றாம் உலகத்திற்கு' மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும், தனது அறிவுக்கூர்மை மற்றும் தளராத மன உறுதியை வெளிப்படுத்தி, மற்ற போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக அமைந்த விஜயலக்ஷ்மி, மூன்றாம் உலகத்தில் அனைத்து சவால்களிலும் வெற்றி பெற்று இறுதியாக சர்வைவர் பட்டத்தையும், ரூ.1 கோடி ரொக்க பரிசையும் வென்றார்.