இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சின்னத்திரையில் செல்ல தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி என்ற டிடி. தற்போது சினிமாவில் நடிப்பது குறித்து கவனம் செலுத்தி வரும் டிடி, சமீபத்தில் ஆர் ஆர் ஆர் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக மீண்டும் சின்னத்திரை வந்துள்ளார். எப்போதும் குழந்தை தனத்துடன் ஜாலியாக போஸ்ட் போட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் டிடி, சமீபத்தில் வீல்சேரில் இருப்பது போல் போட்டை ஒன்றை பகிர்ந்திருந்தார்.
இதனையடுத்து அவருக்கு ஆக்ஸிடண்ட் ஆகிவிட்டதா என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அதற்கு விளக்கமளித்துள்ள டிடி, 'எனக்கு முடக்குவாதம் இருப்பதால் நீண்ட தூரம் நடக்க முடியாது அதற்காக தான் வீல் சேர் பயன்படுத்தினேன். ஆனால் இந்த முடக்குவாதத்தால், எனக்குள் இருக்கும் குழந்தை தன்மையை ஒருபோதும் தடுக்க முடியாது' என கூறியுள்ளார்.
ஒருபுறம் டிடிக்கு முடக்குவாதம் என்று தெரிந்தவுடன் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், அதேசமயம் டிடி அதை பாசிட்டிவாக அணுகுவதை கண்டு பாராட்டி மகிழ்ந்து வருகின்றனர்.
டிடி தற்போது விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' பிக்பாஸ் வருணின் 'ஜோஷ்வா இமை போல் காக்க' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.