திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், முந்தை பிக்பாஸ் சீசன்களை ஒப்பிடும் போது, பிக்பாஸ் 5, ரசிகர்களை ஏமாற்றியது என்றே சொல்ல வேண்டும். எந்த ஒரு டாஸ்க்கும் விறுவிறுப்பு இல்லாமல் சென்றது. இந்நிலையில், விஜய் டிவி முந்தைய பிக்பாஸ் சீசன்களின் பிரபலங்களை வைத்து ஸ்பெஷல் ஷோ ஒன்றை நடத்தியுள்ளது. இதில் பிக்பாஸ் பிரபலங்கள் தங்கள் பார்ட்னருடன் பங்கேற்கின்றனர்.
அந்த வகையில், சிநேகன் - கன்னிகா, சுஜா வருணி - சிவகுமார் , அனிதா சம்பத் - பிரபாகரன், ரம்யா என்.எஸ்.கே - சத்யா, சென்ராயன் - கயல்விழி, வேல் முருகன் - கலா, ஆர்த்தி - கணேஷ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியை மணிமேகலை மற்றும் ஈரோடு மகேஷ் ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர். இந்த நிகழ்ச்சியின் புரோமோக்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதில் வேல்முருகன், 'ஒவ்வொரு மனைவிக்கும் அவங்களோட புருஷன் ஸ்டைலா, கெத்தா இருக்கணும்னு ஆசை இருக்கும். எனக்கு அப்படி எல்லாம் இருக்க தெரியாது. ஆனால், என் மனைவி என்னை அப்படியே ஏத்துக்கிட்டா' என்று சொல்லி கண்ணீர் மல்க நெகிழ்ச்சியாக பேசுகிறார்.
எங்க வீட்டு பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் ஞாயிறு மதியம் 3 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.