சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு |

சின்னத்திரை தொகுப்பாளினியான மணிமேகலைக்கு, அவரது துடுக்குத்தனமான ஆட்டிடியூட் மற்றும் பேச்சு சாமர்த்தியத்திற்காக பலரும் ரசிகர்களாக உள்ளனர். வீஜே கேரியரை ஸ்டார்ட் செய்த அவர், திருமணத்திற்கு பிறகு சிறு ப்ரேக் எடுத்துக் கொண்டு தற்போது மீண்டும் இறங்கி அடித்து வருகிறார்.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி மற்றும் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதனையடுத்து சில ஸ்பெஷல் ஷோக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். சமீபகாலங்களில் பட்டிமன்ற மேடைகளிலும் ஆக்டிவாக இருக்கும் தனது திறமையான தர்க்கத்தால் கைத்தட்டல்களை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அவர் தனது மாணவ பருவத்தில் பள்ளிக்கூடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதன் கேப்ஷனில், 'எப்போதுமே என் கையில மைக் இருக்கும்' எனக் குறிப்பிட்டுள்ளார். மணிமேகலைக்கு பேசுவது மிகவும் பிடிக்கும். வீஜே பணிக்கும், பட்டிமன்ற மேடைக்கும் அவர் அவ்வளவு உழைப்பை செய்து வருகிறார். சிறுவயதிலிருந்தே தனக்கு பேசுவது மிகப்பிடிக்கும் என்பதை இந்த புகைப்படத்தின் மூலம் மணிமேகலை அனைவருக்கும் தெரிவித்துள்ளார்.