தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாக அறிமுகமானவர் சரண்யா துராடி. விஜய் டிவியின் 'ஆயுத எழுத்து' தொடரில் நடித்த வந்த சரண்யா திடீரென தொடரில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், அவர் 'வைதேகி காத்திருந்தால்' தொடரின் மூலம் மீண்டும் சின்னத்திரையில் நடிகையாக ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால், அந்த தொடர் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது.
இதனால் மனமுடைந்த சரண்யா தனது சமூகவலைதளத்தில், 'இந்த கடினமான நேரத்தில் அமைதியாக இருக்க விரும்புகிறேன். எனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு நன்றி. உழைப்பை உதாசீனப்படுத்தும் போது மனது வலிக்கிறது. கூடுதல் பலத்துடன் விரைவில் மீண்டும் வருவேன். எதுவும் என்னை சிதைக்க முடியாது' என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் சில எபிசோடுகள் ஹீரோவாக நடித்து, நடித்த காட்சிகள் முழுதாக கூட வெளிவராத காரணத்தால் முன்னாவும் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
வைதேகி காத்திருந்தால் தொடரில் ஹீரோவாக நடித்து வந்த பிரஜின் சீரியலை விட்டு வெளியேறினார். அவருக்கு பதிலாக முன்னா ரஹ்மான் ஹீரோவாக ஒரு சில எபிசோடுகள் நடித்து வந்த போதிலும், சீரியலை நிறுத்த தயாரிப்புக்குழு மற்றும் டிவி நிறுவனம் முடிவு செய்தது. இந்த தொடர் மொத்தமாக 37 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.