ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
சின்னத்திரை பிரபலங்களான தாடி பாலாஜி, நித்யா ஆகியோரின் குடும்ப பிரச்னை தான் இணையத்தில் தற்போது ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது. இருவரும் மாறி மாறி ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். பிக்பாஸ் மூலம் பிரபலமான நித்யா, பிக்பாஸ் ஷோவினை தொகுத்து வழங்கிய இரண்டு நடிகர்களை ஒப்பிட்டு பேசியுள்ளார். அவர், நடிகர் கமல்ஹாசனை 'வொர்ஸ்ட் கேரக்டர்' என விமர்சித்தும், நடிகர் சிம்புவை தங்கமான மனிதர் என புகழாராம் சூட்டியும் பேசியுள்ளார்.
சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் நித்யா பேசிய போது, 'பிக்பாஸ் முடிந்ததும் கமல்ஹாசன் மது விருந்து வைத்தார். அதில் பாலாஜி என்னிடம் சொல்லாமலேயே வந்தார். அங்கே அவர் கமல்ஹாசன் முன் நல்லவர் போல் நடித்தார். அப்போதே இதைப்பற்றி கமல்ஹாசனிடம் பேச முற்பட்டேன். மக்கள் நீதி மய்யத்திற்காக மிகவும் உழைத்தேன். ஆனால், அவர் என்னிடம் பிரச்னை குறித்து எதையும் கேட்க தயாராக இல்லை. தன் கட்சியில் இருக்கும் பெண்ணின் பிரச்னையே அவரால் தீர்த்து வைக்க முடியவில்லை. அவரா மக்கள் பிரச்னையை தீர்ப்பார்.
மக்கள் நீதி மய்யத்தில் எந்த நீதியும் இல்லை. மீடியாவில் இருந்து என்னிடம் பேசிய ஒரே நபர் சிம்பு மட்டும் தான். முதலில் அவர் கால் செய்தபோது யாரோ மிமிக்ரி செய்து விளையாடுகிறார்கள் என்று நினைத்து கட் செய்தேன். ஆனால், அவர் வீடியோ காலில் வந்து பேசினார். சிம்பு மிகவும் தங்கமான மனிதர்' என்று அதில் கூறியுள்ளார்.