புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா |
சின்னத்திரை பிரபலங்களான தாடி பாலாஜி, நித்யா ஆகியோரின் குடும்ப பிரச்னை தான் இணையத்தில் தற்போது ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது. இருவரும் மாறி மாறி ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். பிக்பாஸ் மூலம் பிரபலமான நித்யா, பிக்பாஸ் ஷோவினை தொகுத்து வழங்கிய இரண்டு நடிகர்களை ஒப்பிட்டு பேசியுள்ளார். அவர், நடிகர் கமல்ஹாசனை 'வொர்ஸ்ட் கேரக்டர்' என விமர்சித்தும், நடிகர் சிம்புவை தங்கமான மனிதர் என புகழாராம் சூட்டியும் பேசியுள்ளார்.
சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் நித்யா பேசிய போது, 'பிக்பாஸ் முடிந்ததும் கமல்ஹாசன் மது விருந்து வைத்தார். அதில் பாலாஜி என்னிடம் சொல்லாமலேயே வந்தார். அங்கே அவர் கமல்ஹாசன் முன் நல்லவர் போல் நடித்தார். அப்போதே இதைப்பற்றி கமல்ஹாசனிடம் பேச முற்பட்டேன். மக்கள் நீதி மய்யத்திற்காக மிகவும் உழைத்தேன். ஆனால், அவர் என்னிடம் பிரச்னை குறித்து எதையும் கேட்க தயாராக இல்லை. தன் கட்சியில் இருக்கும் பெண்ணின் பிரச்னையே அவரால் தீர்த்து வைக்க முடியவில்லை. அவரா மக்கள் பிரச்னையை தீர்ப்பார்.
மக்கள் நீதி மய்யத்தில் எந்த நீதியும் இல்லை. மீடியாவில் இருந்து என்னிடம் பேசிய ஒரே நபர் சிம்பு மட்டும் தான். முதலில் அவர் கால் செய்தபோது யாரோ மிமிக்ரி செய்து விளையாடுகிறார்கள் என்று நினைத்து கட் செய்தேன். ஆனால், அவர் வீடியோ காலில் வந்து பேசினார். சிம்பு மிகவும் தங்கமான மனிதர்' என்று அதில் கூறியுள்ளார்.