இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
'சித்தி 2' தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தார் ப்ரீத்தி சர்மா. லக்னோவை சேர்ந்த இவர் மாடலிங் மற்றும் நடிப்பின் மீதிருந்த ஆர்வத்தால் படிப்பை 10-ஆம் வகுப்புடன் முடித்துவிட்டு நடிக்க வந்துவிட்டார். கலர்ஸ் தமிழின் திருமணம் சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான ப்ரீத்தி ஷர்மா, டிக் டாக், ரிலீஸ் வீடியோக்கள் மூலம் தமிழக இளைஞர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். சித்தி 2 சீரியல் திடீரென முடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழில் வேறெந்த ப்ராஜெக்டிலும் ப்ரீத்தி நடிக்கவில்லை. தெலுங்கில் ஒளிபரப்பாகும் காவ்யாஞ்சலி தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் புடவையில் அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்களை தமிழ் ரசிகர்கள் ஆசையோடு பார்த்து காதலித்து வருகின்றனர். சீக்கிரம் தமிழில் நடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.