இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சின்னத்திரை நேயர்களுக்கு மிகவும் பரிட்சயமான முகம். சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரையில் சில நல்ல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். தற்போது சொந்தமாக யூ-டியூப் சேனல் வைத்திருக்கும் ஜேம்ஸ் வசந்தன் டிவி ரியாலிட்டி ஷோக்களில் நடக்கும் சில தவறுகளை சுட்டிக்காட்டியும், நல்ல விஷயங்களை பாராட்டியும் பேசி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி வந்துவிட்டாலே ரசிகர்கள் பலரும் ஜேம்ஸ் வசந்தனின் கருத்தைக் கேட்க அவரது சோஷியல் மீடியாவுக்கு படையெடுத்து விடுவார்கள். இந்நிலையில், அவர் விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கடுமையாகவிமர்சித்துள்ளார். சமீபத்தில் ஒளிபரப்பான அந்நிகழ்ச்சியில் ரிஹானா என்ற சிறுமி 'கருத்தவென்லாம் கலீஜா' என்ற பாடலை பாடினார். அதில் ஒரு பல்லவியில் தக்காளி என்ற வார்த்தை வரும். விவரம் அறியாத அந்த சிறுமியும் தக்காளி என்ற வார்த்தையை பாடகரை போலவே பாடுகிறார்.
இதுகுறித்து பேசியுள்ள ஜேம்ஸ் வசந்தன், அது ஒரு கெட்டவார்த்தையின் இணைச்சொல் என்பது எல்லா ஆண்களுக்கும் தெரியும். அந்த பிஞ்சு உதடுகள் அதை பாடும் போது எனக்கு திக்கென்று இருக்கிறது. கெட்ட வார்த்தைகளை பாடித்தான் பிழைப்பு நடத்த வேண்டுமா?' என கடுமையாக பேசியுள்ளார்.