துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சின்னத்திரையின் வில்லி நடிகையான ஸ்வேதா ஸ்ரிம்டன், ஜீ தமிழின் 'சித்திரம் பேசுதடி' மற்றும் 'நினைத்தாலே இனிக்கும்' ஆகிய தொடர்களின் மூலம் மீடியா வெளிச்சத்தை பெற்று மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார். மாடலிங்கில் அறிமுகமாகி திரைத்துறையில் பயணித்து வரும் ஸ்வேதாவுக்கு சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று தான் ஆசை. இதற்காக பல வருடங்களாக கடுமையாக முயற்சித்து வந்த ஸ்வேதா, பல குறும்படங்கள், ஆல்பம் பாடல்கள் உட்பட 'ஆடை' மற்றும் 'நயம்' ஆகிய பாடங்களில் கிளாமராக நடித்து கவனம் ஈர்த்தார். ஆனால், திரைப்பட வாய்ப்புகள் சரிவர அமையாததால் சீரியலின் பக்கம் திரும்பினார்.
இந்நிலையில், ஸ்வேதாவுக்கு தற்போது ஹீரோயின் வாய்ப்பு கதவை தட்டியுள்ளது. இயக்குநர் தம்பி ராமையா இயக்கும் 'ராஜா கிளி' படத்தில் ஸ்வேதா ஸ்ரிம்டன் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ள அவர் படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு '9 வருட போராட்டத்திற்கு பிறகு என் கேரியரில் அடுத்தக்கட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளேன்' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ஸ்வேதாவுக்கு சக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.